search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிவேட்டை திருவிழா"

    • நாளை மறு நாள் நடக்கிறது
    • நவராத்திரி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் ஆன்மீக அருள் உரை அதைத்தொடர்ந்து பாட்டு கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சி களும் இரவில் வாகன பவனியும் நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கி றது.

    இதையொட்டி நாளை மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10-30மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்ட பத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்க ரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்க ளுக்கு அருள்பாலிக் கும்நிகழ்ச்சி நடக்கிறது.அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.பகல் 1 மணிக்கு கோவிலில் இருந்து மகா தானபுரம் நோக்கி அம்ம னின் பரிவேட்டை ஊர்வ லம் தொடங்குகிறது.

    இந்த ஊர்வலத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை செல்கிறது. அதைத் தொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து செல்கிறார்கள். மேலும் இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கேரளப் புகழ் தையம் ஆட்டம், பஞ்ச வாத்தியம், கயிலை வாத்தி யம், நாதஸ்வரம், பஜனை, சிங்காரிமேளம், செண்டை மேளம், பேண்ட் வாத்தியம், சிலம்பாட்டம் கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் தெய்வங்களின் வேடம் அணிந்த மோகினி ஆட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறு கின்றன.

    இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத் தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும் போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். கோவிலில் இருந்து புறப் படும் அம்மனின் பரி வேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலையசந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளிசந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டான சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அளிக் கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவி லுக்கு பகவதிஅம்மன் செல்கிறார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவா மிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்க புரம் பகுதிக்கு செல்கிறது. வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து 'திருக்கணம்' சாத்தி வழிபடு கிறார்கள்.

    பின்னர் அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்துக்கு செல்கிறார்.அங்குவைத்து அம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்த தும்அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழி யாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவே சிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோ வில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரி வேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக 500-க் கும்மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பரிவேட்டை திரு விழாவையொட்டி கன்னியா குமரியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நாகர்கோ வில், கொட்டாரம், அஞ்சு கிராமம், கன்னியா குமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திரு விழா நடக்கும் மகாதான புரத்துக்கு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அகஸ் தீஸ்வரம், கொட்டா ரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சார்பில் சுகாதார வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பரிவேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை மறுநாள் பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 24-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. திருவி ழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்கார தீபாராதனை, வாகன பவனி, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், பட்டிமன்றம், சிறப்பு அன்ன தானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 24-ந்தேதி நடக்கி றது. இதையொட்டி அன்று மதியம் 1 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. இதை யொட்டி மகாதானபுரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஏராள மான மிட்டாய் கடைகள், வளையல் கடைகள், ஐஸ் வியாபாரம், விளையாட்டு சாதன பொருட்கள் கடை கள், ராட்சத ராட்டினம், சிறுவர்கள் விளையாடும் சறுக்கு விளையாட்டு மற்றும் சுழலும் ராட்டினம் உள்பட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்க ளும் இடம்பெறுகின்றன.

    இந்த பகுதி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த பகுதியில் திருவிழா காலங்களில் கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு இந்து அறநிலையத்துறை ஏலம் விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஒரு நாள் மட்டும் திருவிழா கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது.

    குமரி மாவட்ட கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், ஆய்வாளர் சரஸ்வதி, கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவில் ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் அலுவலகத்தில் இந்த ஏலம் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.

    திருவிழா கடைகள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சுசீந்திரம் அக்கரையை சேர்ந்த குமார் என்பவர் இந்த திருவிழா கடைகளை ஏலம் எடுத்துள் ளார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதி மற்றும் நாகர் கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதி மகாதானபுரம் பரிவேட்டை மண்டபம் அமைந்து உள்ள பகுதி, பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

    • கன்னியாகுமரியில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
    • கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 10-ம் நாளான நாளைமறுநாள் (புதன்கிழமை) பரிவேட்டை திருவிழாநடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.

    அதன்படி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து தங்க நாற்கர சாலை வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தைசென்றடைய வேண்டும்.

    இதேபோல் கன்னியாகுமரியில்இருந்து புறப்படும் பஸ்கள் இதே வழியாக நாகர்கோவில் செல்ல வேண்டும். பகவதி அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனம் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்றடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.

    மேலும் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அம்மன் வாகனம் விவேகானந்தபுரம் சந்திப்பை கடக்கும் வரை நெல்லையில் இருந்து வரும் பஸ்கள் காவல்கிணறு, அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி விவேகானந்தபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வரைவந்து திரும்பி செல்ல வேண்டும்.

    அம்மன் வாகனம் விவேகானந்தபுரத்தை கடந்து சென்ற பிறகு நெல்லையில் இருந்து அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய சந்திப்பு வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும்.

    இந்த போக்குவரத்து மற்றும் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் பரிவேட்டை ஊர்வலம் நடப்பதையொட்டி அந்த பாதையில் எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த தகவலை கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தெரிவித்து உள்ளார்.

    ×